125x125 Ads

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

வெறுமைக்குள் மயல் கொள்ளும் கனவுவெளி

0 comments


நிழல் இன்மையால் 
விலகிச் சென்ற மேகங்கள்
சூரியனை மறைத்து
தமக்கு அந்நியமான
நிழல்களை
உருவாகிக் கொண்டன
புலராப் பொழுதொன்றில்
சூரியனுக்குப் பயந்து
பூக்களுக்குள் ஒளிந்து கொண்டது
மனம்
காலைப் பனித்துளியில்
வண்டுகளின் ரீங்காரத்தில்
மகரந்தங்களை இழந்தபடி
கழியும் காலம்
நிழற்ற
ஒரு புல்வெளியைப்போல

சி.ரமேஷ்

உடையும் முகக் கண்ணாடி

0 comments


மனித முகத்திரைகள் கிழிக்கப்பட்ட
 கனவு வெளிக்குள்
உறவின் இழைகள் அற
எவ்வித பிரக்ஞையுமற்று
வதை சூழ் ஆழியாய்
வாழ்க்கை வியாபித்தது

விகற்பங்கள் முகமாய்
சமைக்கும் மனிதா; மத்தியில்
எல்லைக் கோடுகளுக்குள்
என் உயிh;ப்பின் இழை அற
புனிதா;களின்
வீணில் படிந்த எச்சில் வாh;த்தைகள்
என்னைக் கழுவிச் செல்கின்றன.

உதிரும் என் எச்சங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து
எனக்குள் உயிரூட்டிக் கொள்கிறேன்
நாளைய சிறுபொழுதொன்றிலாவது
ஒரு கணமேனும்
நான் வானவில்லாய்
தோன்றி மறைவதற்கு

கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்

0 comments

கனகரமேஸ்
வதை சூழ் ஆத்மாவின்
கிழிபடும் இதழ்களுக்கிடையில்
சிக்கிக் கிடந்தது வார்த்தை
துக்கித்த இருளைப்
பிரவகிக்கும் நோக்குடன்
அதன் விழிகளில் துலங்கும்
கூர்மை
என்னை வேட்டையாடத்
தயாராகவே இருந்தது.
வன்மம் குடிகொள்ள
குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி
சமருக்குத் தயாராகும் கணத்தில்
கடவுளின் நாவிலிருந்து
அவர்கள் எழுதிச் சென்றார்கள்
நான் ஏலவே கொல்லப்பட்டவன்
என்பதை
 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine