125x125 Ads

கடவுளின் மலம்

 கடவுளின் மலம்




வட்டத் தொப்பி வடிவில்

சபிக்கப்பட்ட எச்சமாய்

பூமியில் விழுந்தது.

விழுந்த மலம்

உடனடியாக 

அரசின் கவனத்துக்கு

கொண்டு வரப்பட்டு

அரசுடைமையாக்கப்பட்டது

கடவுளின் மலம் பற்றி

அறிந்த மக்கள் அதனை

வணக்கத்துக்குரியதாக 

ஆக்கும்படி வேண்டினர்.

அரசு மறுத்து விட

எதிர்க்கட்சி 

அதனையே

தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு

ஆட்சியைப் பிடித்தது.

சொன்ன வாக்குக்கமைய

கோயிலும் கட்டப்பட்டு

மலமும் பிரதி~;டை செய்யப்பட்டது.

கோயிலால் நகரம் பெருத்தாலும்

நகர மறுத்த நாற்றமாய்

மக்கள் மனமெங்கிலும் மலம்

                        (2003)

0 comments:

Post a Comment

 

Copyright © 2010 • அகமுகம் • Design by Dzignine