உடையும் முகக் கண்ணாடி
Posted by
சி.ரமேஷ்
Saturday, March 15, 2014
மனித முகத்திரைகள் கிழிக்கப்பட்ட
கனவு வெளிக்குள்
உறவின் இழைகள் அற
எவ்வித பிரக்ஞையுமற்று
வதை சூழ் ஆழியாய்
வாழ்க்கை வியாபித்தது
விகற்பங்கள் முகமாய்
சமைக்கும் மனிதா; மத்தியில்
எல்லைக் கோடுகளுக்குள்
என் உயிh;ப்பின் இழை அற
புனிதா;களின்
வீணில் படிந்த எச்சில் வாh;த்தைகள்
என்னைக் கழுவிச் செல்கின்றன.
உதிரும் என் எச்சங்களை
ஒவ்வொன்றாய் பொறுக்கியெடுத்து
எனக்குள் உயிரூட்டிக் கொள்கிறேன்
நாளைய சிறுபொழுதொன்றிலாவது
ஒரு கணமேனும்
நான் வானவில்லாய்
தோன்றி மறைவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment